உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே 7 ஆண்டுக்கு பின்பு நிரம்பிய ஏரி: நூதன வழிபாட்டுக்கு பின்பு தெப்பத்தேர் விட்டனர்

Published On 2022-09-26 14:56 IST   |   Update On 2022-09-26 14:56:00 IST
  • 7 ஆண்டுகள் சரிவர மழை பெய்யாததால் ஏரி வறண்டது.
  • சுடந்த ஒரு 10 நாள் முன்பு பெய்த தொடர் மழையால் குரள் தொட்டி சில தினங்களில் நிரம்பி வழிந்தது.

சூளகிரி,

சூளகிரி அருகே பெத்த சிகரளப் பள்ளி ஊராட்சியை சேர்ந்த குரள்தொட்டி கிராமத்தில் உள்ளது குரள்தொட்டி ஏரி.

இந்த ஏரி நிரம்பினால் குறள்தொட்டி, தீண்ணுர், சிள்னதீண்ணுர், பாப்பனப் பள்ளி, கார்பாலா, ஆறுப்பள்ளி, மற்றும் ஆழ்துழைகிணறு , மற்றும் விவசாயம் வளம் பெறும்.

ஆனால் 7 ஆண்டுகள் சரிவர மழை பெய்யாததால் ஏரி வறண்டது.இதனால் விவசாயிகள் மிகுந்த கஷ்டபட்டு வந்தனர்.

சுடந்த ஒரு 10 நாள் முன்பு பெய்த தொடர் மழையால் குரள் தொட்டி சில தினங்களில் நிறம்பி வழிந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று கூடி பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர் வளமாக வந்து கிடா வெட்டி வழிபட்டு ஏரியில் தெப்பத்தேர் விட்டனர்.

Tags:    

Similar News