உள்ளூர் செய்திகள்

குருபரப்பள்ளி சுற்று வட்டாரத்தில் 11-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

Published On 2025-11-08 17:37 IST   |   Update On 2025-11-08 17:37:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
  • சூளகிரி நகரம், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி,

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குருபரபபள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குருபரப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், சூளகிரி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News