உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றிய போது எடுத்த படம்.

நத்தம் அருகே பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-08 12:07 IST   |   Update On 2023-02-08 12:07:00 IST
  • புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
  • விழா ஏற்பாடுகளை பாப்பாபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

நத்தம்:

நத்தம் அருகே பாப்பாபட்டி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் முதல்நாள் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, நாம் தமிழர் கட்சி மாநில கொள்கைபரப்பு செயலாளர் சிவசங்கரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், பழனிக்குமார், இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாப்பாபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News