உள்ளூர் செய்திகள்

வாள்வீச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகள்.


மாநில வாள்வீச்சு போட்டி: கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தகுதி

Published On 2023-01-10 09:18 GMT   |   Update On 2023-01-10 09:18 GMT
  • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.
  • சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.

வள்ளியூர்:

கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.

சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.

பாயில் பிரிவில் ஆஷிக், ஜீடித் முதல் பரிசையும், ஆகாஷ் 2-ம் பரிசையும் பெற்றனர். சகாய ஆன்றோ, எபன் 3-ம் பரிசை பெற்றனர்.சேபர் பிரிவில் செரின் முதல் பரிசையும், வின்சர் 2-ம் பரிசையும் பெற்றனர்.

பவுல் ராஜ், ரோஷன் 3-ம் பரிசையும் பெற்றனர். ஜீனியர் மாணவர் சேபர் பிரிவில் ஜெர்னிசன், தருண்குமார் முதல் மற்றும் 2-ம் பரிசையும் பெற்றனர். பாயில், எப்பீ பிரிவுகளில் மெல்சன், அமீர் 2-வது பரிசு பெற்றனர்.

மொத்தம் 26 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டிகளில் வெற்றி பெற்றுமாநில அளவிலான வாள் வீச்சு போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளிதாளாளர் டாக்டர்.தினேஷ், முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி, டேனியல் பயிற்சியாளர் ஏஞ்சல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News