கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா
- முதன்மை நிகழ்ச்சியாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- கணினி அறிவியல் துறை பேராசிரியர் கவிதா ஏற்பாடு செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட விழாவில் முதன்மை நிகழ்ச்சியாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சென்னப்பள்ளி ஊராட்சியில் இரண்டாம் நிகழ்ச்சியாக தூய்மைப் பணியினை மேற்கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மேலும் சூளகிரி வட்டார மாதிரி கிராமத்தில் மியோவாக்கி, மண்புழு உரம், மக்கும் குப்பை , மக்காத குப்பைகளை தரம் பிரித்து களப்பணி மேற்கொண்டனர் .
இந்நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி செல்வம், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுசீலா திம்மராயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவாக மஞ்ச பை விழிப்புணர்வினை நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏற்படுத்தினர். திட்ட அலுவலர்கள் ஜெகன், ராமமூர்த்தி, ஸ்டீபன் விக்டர் ஆண்டனி மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கவிதா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.