உள்ளூர் செய்திகள்

மெஞ்ஞானபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா

Published On 2023-09-07 14:24 IST   |   Update On 2023-09-07 14:24:00 IST
  • முதல் நாள் திங்கட்கிழமை மாலையில் குடியழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.
  • தொடர்ந்து புதன் கிழமை காலை 7 மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் முத்துலட்சுமிபுரம் யாதவர் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் திங்கட்கிழமை மாலையில் குடி யழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும். செவ்வாய் காலையில் அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல். மாலை 4 மணிக்கு அம்மன் வீதி உலா வருதல், இரவு 11 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு படைப்பு தீபாராதனையும், புதன் கிழமை காலை 7 மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News