உள்ளூர் செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள முட்டை கோஸ்.

கொடைக்கானலில் மழையால் முட்டை கோஸ் விவசாயம் பாதிப்பு

Published On 2022-11-07 10:08 IST   |   Update On 2022-11-07 10:08:00 IST
  • பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் தற்போது அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர்.
  • தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முட்டைக்கோசு விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் செடிகள் அனைத்தும் அழுகி வருகிறது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் தற்போது அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முட்டைக்கோசு விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் செடிகள் அனைத்தும் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். தாங்கள் முட்டைக்கோஸ் விளைவிக்க வாங்கிய மூலப்பொருட்களின் தொகை கூட கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News