உள்ளூர் செய்திகள்

மதுக்கடை அருகே மோதலை தடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து

Published On 2022-10-18 12:52 IST   |   Update On 2022-10-18 12:52:00 IST
  • 2 வாலிபர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.
  • பலத்த காயம் அடைந்த முனுசாமி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள குமரபேட்டை ஊராட்சி, அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை உள்ளது. இங்கு 2 வாலிபர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை ராள்ளபாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது31) என்பவர் தடுத்தார். இதில் முனுசாமிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News