உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி கடத்தல்

Published On 2023-04-07 09:40 GMT   |   Update On 2023-04-07 09:40 GMT
  • தேர்வு முடித்து நிலையில் வீட்டில் இருந்த சிறுமி கடந்த 5-ந் தேதி வெளியே சென்றார்.
  • கம்பைநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் பிரபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பழைய தருமபுரி நத்தவாய் தெருவைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தேர்வு முடித்து நிலையில் வீட்டில் இருந்த சிறுமி கடந்த 5-ந் தேதி வெளியே சென்றார்.

ஆனால் மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி–பார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிசாமி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மகளை கம்பைநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் பிரபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான சிறுமியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News