உள்ளூர் செய்திகள்

புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமி கிரிவலம்

Published On 2023-09-29 06:22 GMT   |   Update On 2023-09-29 06:22 GMT
  • புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமி கிரிவலம்
  • போற்றி பாடல் பாடிக் கொண்டே பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

 வேலாயுதம் பாளையம்,  புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்

கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி வரும் பாதையில் புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் இரவு நடைபெற்றது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டு புகழிமலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வரிசையாக ஊர்வலமாக வந்தனர். ஆறுநாட்டார் மலை என போற்றி வணங்கப்படும் புகழிமலையில் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமான் ,சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமான், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி போற்றி பாடல் பாடிக் கொண்டே பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

Tags:    

Similar News