உள்ளூர் செய்திகள்

மோட்டார் பைக் மீது லாரி மோதி விபத்து

Published On 2023-10-08 12:15 IST   |   Update On 2023-10-08 12:15:00 IST
  • திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல்
  • தலை நசுங்கி புகளூர் நகராட்சி ஊழியர் பலி

 நொய்யல் 

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 58) .இவர் கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சியில் பம்பு ஹவுசிங் ஆப்பரேட்டராக (குடிநீர் மோட்டார் இயக்குபவர்) கடந்த 30 வருடங்களாக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊரான காட்டுப்புத்தூருக்கு சென்று விட்டு காலை தனது மோட்டார் பைக்கில் காட்டுப்புத்தூரில் இருந்து புறப்பட்டு புகளூர் நகராட்சி அலுவலகத்திற்கு செல்வதற்காக சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக்போஸ்ட் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார் .

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாமக்கல்லில் இருந்து பழனிக்கு லாரியில் தவிட்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி அதிவேகமாக வந்து தங்கவேல் ஒட்டிச் சென்ற மோட்டார் பைக் மீது மோதியதில் தங்கவேல் சாலையில் கீழே விழுந்தார். இதனால் லாரி டயர் தங்கவேல் தலையில் ஏறி நின்றது. இதில் தங்கவேலின் தலை நசுங்கி தங்கவேல் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சவடமுத்து ( 40) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News