உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2023-09-11 11:52 IST   |   Update On 2023-09-11 11:52:00 IST
  • குளித்தலையில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

கரூர்,  

குளித்தலை அடுத்த முதலைப் பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சம்பூரணம்(வயது 58). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம்குடித்தார். உடன் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சம்பூரணம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News