உள்ளூர் செய்திகள்

357 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-02-16 14:49 IST   |   Update On 2023-02-16 14:49:00 IST
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்

குளித்தலை:

குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மக்கள் குறைகள் குறித்து பல்வேறு மனுக்களை பெற்றனர். இதில் பெறப்பட்ட மனுக்களை தீர்வு கண்டு மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தனர். இதனை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு விழாவில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 357 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பல்வேறு துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், சிவாயம் ஊராட்சி தலைவர் திருமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News