உள்ளூர் செய்திகள்

சுண்ணாம்புக்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

Published On 2023-01-13 12:46 IST   |   Update On 2023-01-13 12:46:00 IST
  • சுண்ணாம்புக்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது
  • கனிமவளத்துறை உதவி புவியியலாளர் இளங்கோவன், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்

கரூர்:

கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி பாலம் அருகே லாரியில் சுண்ணாம்புக்கல் கடத்துவதாக, கரூர் மாவட்ட கனிமவளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனிமவளத்துறை உதவி புவியியலாளர் இளங்கோவன், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், வெங்கல்பட்டியில் போலீசார் சோதனை நடத்திய போது, அப்பகுதியில், 25 டன் சுண்ணாம்புக்கல்லுடன் டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும், லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியை பறி முதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றன.


Tags:    

Similar News