வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மெக்கானிக்
- வீட்டிற்குள் அழுகிய நிலையில் மெக்கானிக் பிணமாக கிடந்தார்
- மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார்
கரூர்:
திருப்பூா் மாவட்டம், வீரபாண்டியை மூகாம்பிகை நகரை சோ்ந்தவா் லட்சுமணன்(வயது37). ஏ.சி.மெக்கானிக். இவருடைய மனைவி தேன்மொழி. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
தற்போது லட்சுமணன் கரூா் தாந்தோன்றிமலை கணபதிபாளையத்தில் தங்கி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் தாந்தோணிமலை போலீசில் புகாா் செய்தனா். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அழுகிய நிலையில் கிடந்த லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லட்சுமணன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து இருப்பார்களா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.