உள்ளூர் செய்திகள்

ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2023-09-11 06:23 GMT   |   Update On 2023-09-11 06:23 GMT
  • கோம்புப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆவணி மாத ஏகாதெசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது
  • சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

வேலாயுதம்பாளையம் 

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி மற்றும்பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News