உள்ளூர் செய்திகள்

நொய்யல் பகுதியில் மின் தடை

Published On 2023-10-03 13:52 IST   |   Update On 2023-10-03 13:52:00 IST
  • நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை என அறிவிப்பு
  • மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி, புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நொய்யல், குப்பம், அத்திப்பாளையம், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு அத்திப்பாளையம் புதூர் வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய ஊர்களுக்கும், மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News