உள்ளூர் செய்திகள்
- 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பணிகள் நிறுத்தம்
- மழை நின்ற பின் பணி தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்,
கரூர் மாவட்டத்தில்பரவலாக சாரல் மழை பெய்ததால் நெல் அறுவடை பணி பாதிக்கப் பட்டது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மாயனூர், திருக்காம்புலியூர், மகா தானபுரம், லாலாப்பேட்டை, நந்தன் கோட்டை, வல்லம், வீரவள்ளி ஆகிய இடங்களில், 100க்கும் மேற்பட்ட ஏக் கரில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் அப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வயல் களில் நெற்கதிர் இயந்திரம், டிராக்டர் கொண்டு அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டது. மழை நின்று வெயில் அடித்தால் மீண்டும் அறுவடை பணி தொடங்கும் என விவசாயிகள் கூறினர்