உள்ளூர் செய்திகள்
- கரூரில் இயற்கைப் பெருவிழா நடைபெற்றது.
- பல்வேறு அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன.
கரூர்:
கரூர் மாநகராட்சி சார்பில் கொங்கு திருமண மண்டபத்தில் இயற்கை பெருவிழா கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. விழாவுக்கு மாநகரட்சி மேயர் கவிதா ப.சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வீட்டிலேயே தொட்டி மூலம் உரம் தயாரிப்பது, மாடித்ேதாட்டம் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று, சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.