உள்ளூர் செய்திகள்

க.பரமத்தி அருகே கள் விற்றவர் கைது

Published On 2023-08-07 13:29 IST   |   Update On 2023-08-07 13:29:00 IST
  • க.பரமத்தி அருகே கள் விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
  • வாட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த கள் பறிமுதல்

கரூர்,

க.பரமத்தி அடுத்த தென்னிலை சுற்று பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி கள் இறக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் கருஞ்செல்லிபாளையம் என்ற இடத்துக்கு சென்றனர். பாளையத்தை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பாலசுப்பிரமணி (எ) பாலுகுட்டி(வயது 47) என்பவர் நிலத்தில் அனுமதியின்றி கள் இறக்கி வாட்டர் பாட்டிலில் விற்பனை செய்து கொண்டிருப்பது, தென்னிலை போலீ சாரால் கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News