உள்ளூர் செய்திகள்

மகிளிப்பட்டி கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடி தீவிரம்

Published On 2023-06-02 07:12 GMT   |   Update On 2023-06-02 07:12 GMT
  • மகிளிப்பட்டி கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடி தீவிரம் அடைந்து வருகிறது
  • வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரூர்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் வெண்டைகாய்களை பறித்து உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். தற்போது கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News