உள்ளூர் செய்திகள்

தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-08-04 06:22 GMT   |   Update On 2023-08-04 06:22 GMT
  • தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

கரூர்

கரூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் 16.8.2023 அன்று 40 வயதிற்குள் உள்ள ஆதரவற்ற விதவை, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் வருமான சான்று, இருப்பிட சான்று, 6 மாதம் தையல் பயிற்சிக்கான சான்று, கல்வி சான்று, பிறப்பு சான்று, சாதி சான்று, விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டவர் அல்லது ஆதரவற்ற விதவை அல்லது வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கரூர் என்ற முகவரிக்கு வருகிற 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News