உள்ளூர் செய்திகள்
- பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தி.மு.க.அரசை கண்டித்து நடைபெற்றது
கரூர்:
தி.மு.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, பா.ஜ.க.வினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையா உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி கரூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், மாநில இணை பொருளாளர் மற்றொரு சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.