உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-09-14 12:03 IST   |   Update On 2023-09-14 12:07:00 IST
  • கரூர் தரகம்பட்டியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர் 

கரூர் தரகம்பட்டி அருகே உள்ள மேலப்பகுதி ஊராட்சி விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 49)விவசாயி. இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவதி பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனிசாமி கடந்த 11-ந்தேதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பழனிசாமிைய மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News