உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Published On 2023-09-09 14:02 IST   |   Update On 2023-09-09 14:02:00 IST
  • விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
  • வயது முதிர்வு காரணமாக உடல் நிலை சரியில்லாததால்

கரூர்:

கரூர் தரகம்பட்டி அருகே உள்ள தனகப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சிறும்பாயி (வயது 70). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிறும்பாயி சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறும்பாயி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து சிறும்பாயின் மகன் மாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News