கரூர் பாராளுமன்ற தொகுதியை குறிவைக்கும் தி.மு.க.
- 2024 தேர்தலில் கரூர் பாராளுமன்ற தொகுதியை தி.மு.க. குறி வைக்கிறது
- ஜோதிமணி எம்.பி. தொகுதி மாறுவாரா?
கரூர்,
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. கூட்டணி இடம் பெற்று ள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளில் சரி பாதி தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. பங்கிட்டு கொடு த்தது.
அதில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், 2 கம்யூனி ஸ்டு இயக்கங்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்ப ட்டது.
இதில் இந்திய ஜனநாயக தற்போது கட்சி விலகி நிற்கி றது. மக்கள் நீதி மய்யம் உள்ளே வர காத்திருக்கிறது.
இந்த நிலையில் நடை பெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள ஒரு சில கட்சிகள் கூடுதல் இடம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியும் கட ந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளையும் கேட்கி றது.
தொகுதி பங்கீட்டைப் பொறுத்த அளவில் காங்கிர ஸுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே தொகு திகளை மீண்டும் ஒதுக்குவ தற்கான வாய்ப்பு அதிகம் இல்லை.
தொகுதி எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருப்ப தாக சொல்லப்பட்டு வருகி றது.
இதற்கிடையே ஒரே இய க்கம் மீண்டும் மீண்டும் அதே தொகுதியில் கோலோ ச்சுவதை தி.மு.க. விரும்பவி ல்லை. தங்களது இயக்கத்தில் இருக்கும் அந்தந்த மாவட்ட த்தில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
ஆகவே கூட்டணியில் அதிக சீட்டுகள் வைத்திரு க்கும் காங்கிரஸ் தொகுதிகள் வருகிற தேர்தலில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதில் பிரதானமாக கரூர் பாராளுமன்ற தொகு தியை தி.மு.க. தலைமை குறி வைத்துள்ளது. இந்த தொகு தியில் உடன்பிறப்புகள் நேரடியாக களம் காண தீர்மானித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜோதி மணியின் வெற்றிக்கு அமைச்சர் செந் தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். பின்னர் இடை ப்பட்ட காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் வெடி த்தது.
அப்போதே மீண்டும் தி.மு.க. கூட்டணியில் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடை க்காது என்று அக்கட்சியினர் சொல்லி வந்தனர். அது விரைவில் உறுதி யாக இருப்பதாக சொல்கிறா ர்கள்.
ஆனால் ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.
ஆகவே தனக்கான ரூட் டில் சென்று சலசலப்பு இல்லாமல் மீண்டும் கரூர் தொகுதியை பெற்று அனை வரையும் வியக்க வைப்பார் அல்லது கரூரில் தி.மு.க.வி னரின் ஒத்து ழைப்பு கிடைக்காத பட்சத்தில் தொகுதி மாறி போட்டி யிடவும் வாய்ப்புள்ளது என கதர் சட்டைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தை பொரு த்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இண க்கம் இல்லாத நிலை இருக்கி றது.
இவ்வாறான சூழலில் தொகுதி ஒதுக்கீட்டில் ஜோதிமணியிடம் பூத் கமி ட்டி பலத்தை தி.மு.க. கேட் டால் அது அவருக்கு நெரு க்கடியை ஏற்படுத்தும். ஆகவே நிச்சயம் வருகிற தேர்தலில் ஜோதி மணியின் திட்டம் கரூரில் எடுபடாது என தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் அடித்து கூறினார்.
யார் என்ன சொன்னா லும் காலம் சொல்லும் பதிலுக்காக நாம் காத்திருப்போம்...