உள்ளூர் செய்திகள்

ஜூலை 2-ந் தேதி கரூர் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

Published On 2022-06-25 07:12 GMT   |   Update On 2022-06-25 07:12 GMT
  • ஜூலை 2-ந் தேதி கரூர் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
  • நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்

கரூர்:

ஜூலை 2-ந் தேதி கரூர் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்துக்கு ஜூலை 2-ந் தேதி முதல்வர் வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதையடுத்து விழா நடைபெறும் திருமாநிலையூர் திடலை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு ஜூலை 2-ந் தேதி வருகை தந்து, 76 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய கரூர் மாவட்டத்தில் முதல்வர் பதவியேற்ற ஒராண்டில் 76 ஆயிரத்தற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்கிறோம்.

கடலில் காற்றாலைகள் நிறுவி மின் உற்பத்தி செய்வது தொடர்பாக ஸ்காட்லாந்து சென்று, அங்கே கடலில் காற்றாலைகள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது, திட்டச் செலவுகள் எவ்வளவு செலவாகும் என ஆய்வு செய்த பின்னரே இத் திட்டம் முழுவடிவம் ெபறும்.

தமிழகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். சுமார் 50 கி.மீ. கடலுக்குள் கேபிள் அமைத்துத்தான் கடல் காற்றாலையில் மின் உற்பத்தியை பெற முடியும் .

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News