உள்ளூர் செய்திகள்
கார்பெண்டர் தீக்குளித்து தற்கொலை
- வயிற்றுவலியால் நடந்த சம்பவம்
- கார்பெண்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கரூர்:
குளித்தலை அருகே நெய்தலுார் பெரியபனையூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32), கார் பெண்டர். இவர் தொடர் வயிற்று வலியுடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால், இதனால் விரக்தியடைந்த காணிமுத்து, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காளிமுத்து உயிரிழந்தார். இவருக்கு வல்லி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.