உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Published On 2023-08-25 08:15 GMT   |   Update On 2023-08-25 08:15 GMT
  • ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது
  • மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது

கரூர்

தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசித்தலை மேம்படுதற்காக ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன், வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி கலந்து கொண்டு, பயிற்சிகளை மேற்பார்வை செய்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சிறப்பு கருத்தாளர் சாந்தி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை தோகைமலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மலையாளம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News