உள்ளூர் செய்திகள்

பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து

Published On 2023-09-20 06:39 GMT   |   Update On 2023-09-20 06:39 GMT
  • கட்டண கழிப்பிடம் செல்வதில் தகராறு காரணமாக பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது
  • கரூர் டவுன் போலீசார் மற்றொரு டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர், 

கரூர், வடக்கு பிரதட்ணம் சாலையை சேர்ந்தவர் வெற்றி முரசு (வயது 26), மினி பஸ் டிரைவர். இவர், கரூர் பஸ் ஸ்டாண்டில், கட்டண கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். அப்போது, கழிப்பிடத்தின் ஊழியர், வெற்றி முரசுவிடம் கட்டண தொகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கரூர் நெரூரை சேர்ந்த மற்றொரு மினி பஸ் டிரைவர் கபில் (30), கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். பிறகு, கழிப்பிட ஊழியருக்கு ஆதரவாக கபில் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெற்றி முரசு, கபிலை கத்தியால் தலை, கண்களில் குத்தினார். அதில், காயமடைந்த கபில் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வெற்றி முரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News