உள்ளூர் செய்திகள்

புகழூரில் நகராட்சி கூட்டம் நடைபெற்றது

Published On 2023-07-25 12:31 IST   |   Update On 2023-07-25 12:31:00 IST
  • புகழூர் நகராட்சி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
  • நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

வேலாயுதம் பாளையம், 

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார் .துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-புகழூர் நகராட்சிக்குட்பட்ட அன்னை நகர் தெருவில் உள்ள மண் சாலையை ரூ35 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். புகழூர் நகராட்சிக்குட்பட்ட மாரியப்ப பிள்ளை காலனியில் மண் சாலையை ரூ61 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். சிந்து நகர் பகுதியில் மண்சாலையைரூ 28 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். ஹை ஸ்கூல் வீதி, பசுபதி நகர் , செம்படாபாளையம், சக்தி நிலா கார்டன் உள்ளிட்ட பகுதியில் ரூ39 அச்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளை புதுப்பித்தல். பாறை வீதி, கௌதமபுரம், பாரதி நகர் காந்தி நகர் ,முருகம்பாளையம் ,நாடார் தெரு, புகழூர் நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரஊ27 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகளை புதுப்பித்தல். குறிஞ்சி நகர், மாரிஸ் கார்டன், கே சி ஆர் நகர் பகுதிகளில் உள்ள மண்சாலையை ரூ 57 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். பரணி நகர், காயத்திரி நகர் பகுதிகளில் உள்ள மண் சாலையை ரூ18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். புகழூர் நகராட்சி கலைமகள் நகர் முதல் உழவர் சந்தை வரை ரூ37 லட்சம் மதிப்பீட்டில்மழை நீர் வடிகால் அமைத்தல். சுந்தராம்பாள் நகர் பகுதியில் ரூ 4.70 லட்சம் மதிப்பீட்டில் பகிர்மான குழாய் விஸ்தரிப்பு செய்தல்,ரூ 18.50 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மராமத்து செய்தல். குமரன் நகர் மற்றும் வாட்டர் டேங்க் சந்து பகுதியில் ரூ23 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மராமத்து செய்தல். உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News