உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

Published On 2022-09-26 06:50 GMT   |   Update On 2022-09-26 06:50 GMT
  • ரத்த தான முகாம் நடைபெற்றது
  • மேயர் தொடங்கிவைத்தார்

கரூர்:

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாநகர மேயர் கவிதா ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் அறிவழகன் தலைமையிலான குழுவினர் 58 யூனிட் ரத்தம் சேகரித்தனர். 

Tags:    

Similar News