உள்ளூர் செய்திகள்
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் போட்டி
- விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா விளையாட்டு சைக்கிள் போட்டி நடைபெற்றது
- மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
கரூர்,
கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியை கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்தார்.கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மொத்தம் 562 பேர் கலந்து கொண்டார்கள். போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்பட்டு வெற்றி வெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், தடகள பயிற்றுநர் சபரிநாதன், மல்யுத்த பயிற்றுநர் மெய்ஞானமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் மகாமுனி, சதிஸ், மணிமாறன் உட்பட கலந்து கொண்டனர்.