உள்ளூர் செய்திகள்

வழி பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-12-12 15:35 IST   |   Update On 2022-12-12 15:35:00 IST
  • வழி பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • நடந்து சென்று போது சம்பவம்

கரூர்:

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சியாம் சுந்தர். இவர் நேற்று இரவு கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (35), சுரேஷ் (32) ஆகியோர் அவரை தாக்கி, கத்தியால் கீறி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News