உள்ளூர் செய்திகள்

பார் ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

Published On 2023-02-06 13:52 IST   |   Update On 2023-02-06 13:52:00 IST
  • மது பாரிலேயே அட்டகாசம்
  • 2 பேர் கைது

கரூர்

கோதூரை சேர்ந்தவர் வீரமணி (வயது 21). இவர் அதே பகுதி டாஸ்மாக் மது பாரில் சமையலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வெங்கமேட்டை சேர்ந்த கார்த்திக் (வயது 21), திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் அங்கு வந்து, வீரமணியை மிரட்டி ரூ. 600 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வீரமணி அளித்த புகாரி பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News