உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பலி

Published On 2023-04-29 09:15 GMT   |   Update On 2023-04-29 09:15 GMT
  • அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
  • நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் சரக்கல் விளை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 62). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஞானதாஸ் நேற்று மதியம் புன்னைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானதாஸ் படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு பொது மக்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஞானதாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

ஞானதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

இது தொடர்பாக போக்கு வரத்து பிரிவு போலீசார் அரசு பஸ் டிரைவர் அனீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

Tags:    

Similar News