உள்ளூர் செய்திகள்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்த்தாண்டத்தில் 4-ந்தேதி நடக்கிறது

Published On 2023-11-03 07:53 GMT   |   Update On 2023-11-03 07:53 GMT
  • மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.
  • 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை 4-ந்தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News