உள்ளூர் செய்திகள்

குளச்சலில் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-06-23 11:53 GMT   |   Update On 2023-06-23 11:53 GMT
  • குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி:

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று மாலை குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வீடுகளுக்கு இடையே அதிக அளவில் ரேசன் அரிசி கடத்து வதற்கு பதுக்கி வைத்தி ருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 100 சிறு பிளாஸ்டிக் மூட்டை களில் சுமார் 2 டன் கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே அவற்றை பறிமுதல் செய்து உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ரேசன் அரிசியை அங்கு பதுக்கி வைத்திருந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News