உள்ளூர் செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே மினி லாரி மோதி தொழிலாளர்கள் படுகாயம்
- ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
- மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சிவகுமார் (வயது 32). மீன்பிடி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா டேனியலுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அம்மாண்டிவிளையில் செல்லும்போது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டேவிட் ராஜா டேனியல் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி கோடிமுனையை சேர்ந்த ஆன்றனிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.