உள்ளூர் செய்திகள்

வடசேரியில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

Published On 2022-11-17 07:20 GMT   |   Update On 2022-11-17 07:20 GMT
  • காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அன்பழகனை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை
  • வடசேரி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள்

நாகர்கோவில் :

மார்த்தாண்டம் தெங்கன் குழி விளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 33), கொத்தனார்.

இவர் சரஸ்வதி (21) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அன்பழகன்-சரஸ்வதி தம்பதியினர் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வசித்து வந்தனர். சரஸ்வதி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் அன்பழகன் மட்டும் இருந்தார்.

நேற்று காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அன்பழகனை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக சரஸ்வதி பார்த்த போது அன்பழகன் தூக்கில் பிணமாக தூங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இத னால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடசேரி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட அன்பழகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட் டுள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடைய ஏற்பட்ட தகராறில் சரஸ்வதி வீட்டில் இருந்து அன்பழகன் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அன்பழ கன் தற்கொலை செய்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News