உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரத்துக்கு பறக்கும் காவடியில் பவனி வந்த இலங்கை தமிழ் அகதிகள்

Published On 2022-07-17 07:13 GMT   |   Update On 2022-07-17 07:13 GMT
  • இலங்கை அகதிகள் பறக்கும் காவடியாக கொம்பு தப்பட்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
  • அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும் சமபந்தி விருந்தும் நடந்தது.

கன்னியாகுமரி :

கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் ஈழத் தமிழர் குடியிருப்பில் வன பேச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்கொடை விழா 3 நாட்கள் நடந்தது.

இதையொட்டி முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம் பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதி வரை இலங்கை அகதிகள் பறக்கும் காவடியாக கொம்பு தப்பட்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

இந்த பறக்கும் காவடி யில் இலங்கை அகதிகள் 2 பேர் முதுகில் அலகு குத்தி காவடியை தோளில் சுமந்தபடி பவனியாக வந்தனர். பால்குடங்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடந்தது.2-வதுநாள் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து நையாண்டி மேளமும் வில்லிசையும் நடந்தது. மதியம் சாமி, சாஸ்தா, மற்றும் காலசாமிக்கு பூஜையும் நடந்தது. அதன் பிறகு சமபந்தி விருந்து நடந்தது. இரவு நையாண்டி மேளம், கொம்புதப்பட்டை மேளம்மற்றும் வில்லிசை போன்றவை நடந்தது.

அதன் பிறகு அலங்கார தீபாராதனையும் பூப்படைப் பும் நடந்தது. 3-வது நாள் அதிகாலையில் சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார தீபாராதனைநடந்தது. அதன் பிறகு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சமபந்தி விருந்து நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் இலங்கை அகதிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News