உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு கோவிலில் பக்தர் தவற விட்ட தங்க கொலுசு போலீசில் ஒப்படைப்பு

Published On 2023-08-02 08:04 GMT   |   Update On 2023-08-02 08:04 GMT
  • செட்டிக்குளம் பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார்
  • கொலுசை தவற விட்ட பெண் பக்தர்கள் உரிய அடையாளம் கூறி கொலுசை பெற்று செல்லலாம்

கன்னியாகுமரி :

நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 57). இவர் செட்டிக்குளம் பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார். ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இவர் நேற்று காலை மண்டைக்காடு கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது, விநாயகர் கோவில் அருகில் ஒரு பவுன் தங்க கொலுசு கிடந்ததை கண்டு எடுத்தார். உடனே அவர் மண்டைக்காடு போலீசில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை போலீசார் பாராட்டி னர். கோவில் வளாகத்தில் கொலுசை தவற விட்ட பெண் பக்தர்கள் உரிய அடையாளம் கூறி கொலுசை பெற்று செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News