உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் அனுமதியின்றி செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்

Published On 2023-05-21 08:57 GMT   |   Update On 2023-05-21 08:57 GMT
  • எவ்வித அரசு அனுமதியும் இன்றி செம்மண் எடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2 டெம்போக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறர்கள்.

கன்னியாகுமரி :

ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் முப்பந்தல் அருகே ெரயில்வே ரோடு பகுதியில் ரோந்து பணி சென்றனர்.

அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி செம்மண் எடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தோடு செம்மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் செம்மண் ஏற்றிய டெம்போ மற்றும் ஏற்ற வந்த டெம்போ என 2 டெம்போக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறர்கள்.

Tags:    

Similar News