உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே பேராசிரியை வீட்டில் கொள்ளை

Published On 2022-06-05 11:22 GMT   |   Update On 2022-06-05 11:22 GMT
  • பேராசிரியர் கணவன்-மனைவி இருவரும் தேவாலயம் சென்ற நேரத்தில் வீடு கொள்ளை.
  • கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் பகுதியில் வசிப்பவர் தேவராஜ் (வயது 70). இவரது மனைவி தங்க லீலா. இவர்கள் 2 பேரும் அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணி யாற்றி ஒய்வு பெற்றவர்கள். இன்று காலை கணவன்-மனைவி இருவரும் அரு கில் உள்ள தேவாலயம் சென்றனர்.


அவர்கள் திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்டு 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருள்கள் வீடு முழுவதும் சிதறி கிட ந்தது.


எனவே வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்தி ருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஸ், மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பீரோவில் இருந்த ரூ.25ஆயிரம் கொள்ளை போய் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவு வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர்.


பணத்தை கொள்ளை யடித்த மர்ம நபர்கள் பீரோ டிராயரில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை கவனிக்க வில்லை. இதனால் அந்த நகைகள் தப்பியது.

Tags:    

Similar News