உள்ளூர் செய்திகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- சுப்பையார் குளத்தை தூர் வாரி, அழகுபடுத்தும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடி செலவில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து செல்லும் சி.பி.எச். குறுக்கு சாலை, சிவன்கோவில் தெரு உள்ளிட்ட சாலைகள் சீரமைத்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியை மாநகராட்சி மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணியன் மண்டல தலைவர்கள் ஜவஹர்,அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் வளர்மதி, கலாராணி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 47 லட்சம் செலவில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தை தூர் வாரி, அழகுபடுத்தும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.