உள்ளூர் செய்திகள்
வெட்டூர்ணிமடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது.
- போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
கழிவு நீர் ஓடைக்கு மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.வெட்டூர்ணிமடம் பகுதியில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.