உள்ளூர் செய்திகள்
கொல்லங்கோட்டில் இருந்து கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தப்படும் ரேஷன் அரிசி
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
- ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு இங்கிருந்து கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் மட்டுமின்றி ரேஷன் அரிசியும் கடத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக-கேரள எல்லையில் உள்ள ஊரம்பு பகுதி வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வரும் நிலையில், இதற்காக அங்கு கடை அமைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி கடத்தப் படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்டத் தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு இங்கிருந்து கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது. ஆகவே இந்த கடத்தல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.