உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் விழும் அபூர்வ சூரிய ஒளி 2-ந்தேதி பார்க்கலாம்

Published On 2023-09-27 07:21 GMT   |   Update On 2023-09-27 07:21 GMT
  • ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
  • காந்தி அஸ்தி கட்டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மகாத்மா காந்தி நினைவு மண்ட பத்தில்உள்ள காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீதுஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும்.

காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண அன்றைய தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

அதேபோல இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி யானவருகிற அக்டோபர்மாதம்2-ந்தேதி பகல் 12 மணிக்கு கன்னியா குமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.

Tags:    

Similar News