உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் ராஜாஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி பட்டமளிப்பு விழா
- அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி டீன் நாகராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்
- விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து போராசிரியர்களும், ஊழயர்களும் இணைந்து செய்திருந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள ராஜாஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கல்லூரியின் தாளாளருமான எஸ்.ஏ. ஜாய் ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் தருண் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி டீன் நாகராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து போராசிரியர்களும், ஊழயர்களும் இணைந்து செய்திருந்தனர்.