உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி, சமத்துவபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2023-11-07 06:27 GMT   |   Update On 2023-11-07 06:27 GMT
  • தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது
  • தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் :

செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால் மண்டபம் போன்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை செண்பகராமன்புதூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதுபோல் தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டர்குளம், மரப்பாலம், பொய்கை ரோடு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News